search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹோலி பண்டிகை"

    • கர்னூல் மாவட்டத்தில் விசித்திரமான பாரம்பரியம் கடைபிடிக்கப்படுகிறது.
    • ஆண்கள் பெண்கள் வேடமிட்டு மன்மத பூஜை செய்யும் திருவிழா.

    திருப்பதி:

    ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சியாக வண்ணங்களை தூவி உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

    ஆனால் ஆந்திராவில் ஹோலி பண்டிகையில் ஆண்கள் பெண்கள் வேடமிட்டு மன்மத பூஜை செய்யும் திருவிழா பாரம்பரியமாக நடத்தப்படுகிறது.

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சந்தேகுட்லூர் கிராமத்தில் பழங்காலத்தில் இருந்தே விசித்திரமான பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஹோலி கொண்டாட்டத்தின் போது அங்குள்ள மன்மதா தெய்வத்திற்கு திருவிழா நடத்தப்படுகிறது.

    அப்போது கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் பெண்கள் வேடமணிகிறார்கள். அவர்கள் அழகாக பட்டு சேலை கட்டி, நகைகள் அணிந்து பெண்கள் போல அலங்காரம் செய்கிறார்கள். பின்னர் அவர்கள் தலை நிறைய பூ வைத்து தட்டுகளில் பூ, பழம் தேங்காய் உள்ளிட்டவைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக அங்குள்ள மன்மதன் கோவிலுக்கு செல்கிறார்கள்.

    அங்கு ஆண்கள் பெண்கள் உடையில் மன்மத பூஜை செய்கிறார்கள். மேலும் அந்த தெய்வத்திற்கு நேர்த்திக் கடன்களையும் செலுத்துகின்றனர். பாரம்பரியமாக நடைபெறும் மன்மதத் திருவிழா எங்கள் கிராமத்தின் கடவுள் நம்பிக்கையின் உணர்வை குறிக்கிறது என அங்குள்ள கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான ரோகித் குடும்பத்துடன் ஹோலி பண்டிகை கொண்டாடி உள்ளார்.
    • இதே போன்று ஒவ்வொரு ஐபிஎல் அணி வீரர்களும் ஹோலி பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.

    அகமதாபாத்:

    ஹோலி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஹோலி கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான ரோகித் குடும்பத்துடன் ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி உள்ளார்.

    ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வீரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ரோகித் சர்மா.

    இதே போன்று ராஜஸ்தான் அணி வீரர்களும் ஹோலி பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.

    இது தொடர்பான வீடியோவை அந்தந்த அணியின் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    • வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறு வனங்களில் பணியாற்றுகின்றனர்.
    • ஒருவர் வண்ண பொடிகளை தூவி, சாயங்களை கரைத்து, தெளித்து கொண்டாடினர்.

    திருப்பூர்:

    வட மாநிலத்தவர்களின் கொண்டாட்டங்களில் ஹோலி பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்தது. பின்னலாடை நகரான திருப்பூரில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறு வனங்களில் பணி யாற்றுகின்றனர்.

    இதற்கிடையே ஹோலி பண்டிகையை கொண்டாட திருப்பூரில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் ரெயில் மூலம் தங்களது சொந்த ஊருக்கு சென்று ள்ளனர். திருப்பூரில் வசிக்கும் வட மாநில த்தவர்கள், தங்களது குடும்பத்தினரோடு இன்று முதலே ஹோலி பண்டிகையை, உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    திருப்பூர் ராயபுரம், காதர்பேட்டை, ஸ்டேட் பாங்க் காலனி, சித்தப்பா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வெளி மாநிலத்தவர்கள், நண்பர்கள், உறவினர்களுடன் இணைந்து ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவி, சாயங்களை கரைத்து, தெளித்து கொண்டாடினர். 

    • மக்கள் இன்று முதலே பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
    • பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்த தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வட மாநிலத்தை சேர்ந்த மக்கள் இன்று முதலே வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நாட்டில் உள்ள எனது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஹோலி நல்வாழ்த்துக்கள். பாசம் மற்றும் நல்லிணக்கத்தின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த பாரம்பரிய திருவிழா உங்கள் அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலையும் புதிய உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி மற்றும் தீமைக்கு எதிரான அறத்தின் வெற்றி கொண்டாட்டம்.
    • பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு நிலைமையை கண்காணிக்க ட்ரோன்களையும் போலீசார் பயன்படுத்தியுள்ளனர்.

    நேபாளம் தலைநகர் காத்மாண்டு மற்றும் நாடு முழுவதும் உள்ள மலைப்பாங்கான மாவட்டங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.

    இருப்பினும், நாட்டின் தெற்கு சமவெளிப் பகுதியான தேரையில், ஹோலி திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. நேபாள ஜனாதிபதி ராம்சந்திர பவுடல் ஹோலி பண்டிகையை முன்னிட்டு, " ஹோலி "சமூகத்தில் பரஸ்பர நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் மற்றும் தேசிய ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    மேலும், "உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து நேபாள மக்களுக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்புக்கான தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி பௌடெல், ஹோலி பண்டிகையை "அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி மற்றும் தீமைக்கு எதிரான அறத்தின் வெற்றி கொண்டாட்டம்" என்று விவரித்தார்.

    அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேபாள போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பள்ளத்தாக்கில் சுமார் 5,000 போலீசார் குவிக்கப்பட்டனர்.

    பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு நிலைமையை கண்காணிக்க ட்ரோன்களையும் போலீசார் பயன்படுத்தியுள்ளனர். ஹோலி பண்டிகையின்போது போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்க சுமார் 100 இடங்களில் வாகன சோதனையை படை தொடங்கியது.

    அனுமதியின்றி யாரேனும் மக்கள் மீது வண்ணங்களை தெளித்தோ அல்லது தண்ணீரை வீசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளாட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. காத்மாண்டு பள்ளத்தாக்கு போக்குவரத்து காவல்துறை அலுவலகம் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக குறைந்தது 250 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

    • தொழிலாளர்கள் ஒரு மாத விடுமுறைக்கு பின் திருப்பூர் திரும்புவார்கள்.
    • பனியன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.

    இந்த ஆண்டு வருகிற 24-ந்தேதி ஹோலி பண்டிகை வருவதாலும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாலும் பலர் குழுக்களாக திருப்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகி உள்ளனர்.

    இது குறித்து திருப்பூரை சேர்ந்த பனியன் உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவ்வாறு செல்லும் தொழிலாளர்கள் ஒரு மாத விடுமுறைக்கு பின் திருப்பூர் திரும்புவார்கள்.

    பெரும்பாலும் ஒரு குழு சென்றால் மறு குழு பண்டிகை முடிந்த ஓரிரு நாட்களில் திரும்பி விடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை வருகிற 24-ந்தேதி முடிந்தவுடன் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.வடமாநிலங்களில் ஜூன் மாதம் வரை பல கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்ப மேலும் காலதாமத மாகும்.

    வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்புவதில் காலதாமதமாகும் என்பதால் பனியன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு கேரளா வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
    • நாகர்கோவிலில் இருந்து வருகிற 10, 17, 24, 31 தேதிகளில் புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் பகல் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    சென்னை:

    நாடு முழுவதும் ஹோலி பண்டிகை வருகிற 25-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் ஹோலி பண்டிகையையொட்டி நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஹோலி பண்டிகையையொட்டி ரெயில்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு கேரளா வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. நாகர்கோவிலில் இருந்து வருகிற 10, 17, 24, 31 தேதிகளில் புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் பகல் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து வருகிற 11, 18, 25 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரெயில்கள் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக இயக்கப்படும். இந்த சிறப்பு ரெயிலுக்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி சென்னை- நாகர்கோவில் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

    • வீடியோ மூலம் விசாரணை நடத்திய போலீசார் பெண்ணை துன்புறுத்தியதாக சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
    • கைதானவர்கள் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக துணைபோலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் சைன் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்ற ஹோலி பண்டிகையின் போது ஜப்பானிய இளம்பெண் ஒருவரை இளைஞர்கள் குழு துன்புறுத்துவது போன்று வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அதில், ஜப்பானிய இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் பிடித்து அவர் மீது வண்ணப்பொடிகளை தூவுவதுடன் அந்த பெண் மீது முட்டையை உடைப்பது போன்றும், தண்ணீரை பீய்ச்சி அடித்து அத்துமீறுவது போன்றும், அந்த நபர்களின் பிடியில் இருந்து இளம்பெண் தப்பிக்க முயல்வது போன்றும், அந்த பெண்ணை ஒருவர் கன்னத்தில் அறைவது போன்றும் காட்சிகள் இருந்தன.

    இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

    இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம் தனது டுவிட்டர் பக்கத்தில், உடனடியாக டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து டெல்லி போலீசார் வீடியோ தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பஹர்கஞ்ச் என்ற இடத்தில் ஜப்பானிய இளம்பெண் மீது இந்த துன்புறுத்தல் நடந்தது கண்டறியப்பட்டது.

    தொடர்ந்து வீடியோ மூலம் விசாரணை நடத்திய போலீசார் பெண்ணை துன்புறுத்தியதாக சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்கள் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக துணைபோலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் சைன் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சம்பவம் தொடர்பாக எந்த ஒரு வெளிநாட்டவரிடம் இருந்தும் புகார்கள் வரவில்லை. அதே நேரம் சம்பந்தப்பட்ட பெண் குறித்த விபரங்களை அறிய உதவுமாறு ஜப்பானிய தூதரகத்திற்கு இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

    இதற்கிடையே சம்பந்தப்பட்ட பெண் ஜப்பானிய சுற்றுலா பயணி என்றும், டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் பகுதியில் தங்கியிருந்த அவர் தற்போது வங்கதேசத்திற்கு சென்று விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • சுல்தான்பூர் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோமதி நதியில் ஏராளமானோர் புனித நீராடி குளித்து மகிழ்ந்தனர்.
    • கோமதி நதியில் மூழ்கி 4 பேர் பலியானார்கள்.

    உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோமதி நதியில் ஏராளமானோர் புனித நீராடி குளித்து மகிழ்ந்தனர்.

    அப்போது 4 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். அவர்களில் 3 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. ஒருவர் உடலை தேடி வருகிறார்கள்.

    • ஹோலி பண்டிகை கோவையில் உள்ள தொழிற்சாலைகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
    • வழக்கமாக ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையை கொண்டாட 50 சதவீத வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் ஜவுளி, கட்டுமானம், வார்ப்படம், பம்ப் செட் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் ஆஸ்பத்திரிகள், ஓட்டல்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதனால் அச்சம் அடைந்த வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் இருந்தனர்.

    இதனால் தமிழக அரசு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. வடமாநில தொழிலாளர்கள் அச்சப்பட தேவையில்லை. உங்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இங்கு இல்லை. எதாவது பிரச்சினை என்றால் போலீசை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி செல்போன் எண்களும் வழங்கப்பட்டது. போலீசார் தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று வடமாநில தொழிலாளர்களிடம் பேசி நம்பிக்கை ஊட்டினர்.

    இதன் பலனாக வடமாநில தொழிலாளர்கள் கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வது படிப்படியாக குறைந்தது. இந்தநிலையில் நேற்று ஹோலி பண்டிகை கோவையில் உள்ள தொழிற்சாலைகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வடமாநில தொழிலாளர்களுடன் இணைந்து தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் வண்ணப் பொடிகளை முகத்தில் ஒருவருக்கொருவர் பூசி மகிழ்ந்தனர். ஆடல், பாடல் கொண்டாட்டத்துடன் அவர்களுக்கு அறுசுவை விருந்தும் பரிமாறப்பட்டது.

    இதையொட்டி நேற்று பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதுபற்றி நூற்பாலை சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தற்போது தொழிலாளர்கள் மத்தியில் நிலவிய பீதி குறைந்து விட்டது.

    வழக்கமாக ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையை கொண்டாட 50 சதவீத வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு வதந்தியால் கூடுதலாக 15 சதவீதம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்கள் குடும்பத்தினரிடம் உண்மை நிலவரத்தை கூறி பண்டிகை முடிந்து 10 நாட்களில் கோவைக்கு வருவதாக தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் நடவடிக்கையால் தொழிற்சாலைகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது என்றார்.

    • சவுகார்பேட்டை, வேப்பேரி, தியாகராயநகர், பட்டாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் வடமாநில மக்கள் வண்ண கலர் பொடி பூசி அன்பை பரிமாறிக்கொண்டனர்.
    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கொருவர் கலர் பவுடரை பூசியும், சாயம் கலந்த தண்ணீரை ஊற்றியும் மகிழ்ந்தனர்.

    சென்னை:

    அன்பை பரிமாறக்கூடிய ஹோலி பண்டிகை வட மாநிலங்களில் மட்டுமின்றி கடந்த சில வருடங்களாக தமிழகத்திலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று வடமாநிலத்தவர்கள் இந்த பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

    டெல்லி, ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், குஜராத், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் சென்னையில் கணிசமாக வசித்து வருகின்றனர். அவர்கள் ஹோலி பண்டி கையை கொண்டாடும் விதமாக நேற்று இரவு பழையன கழிதல் என்ற அடிப்படையில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இன்று காலையில் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சவுகார்பேட்டை, வேப்பேரி, தியாகராயநகர், பட்டாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் வடமாநில மக்கள் வண்ண கலர் பொடி பூசி அன்பை பரிமாறிக்கொண்டனர்.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கொருவர் கலர் பவுடரை பூசியும், சாயம் கலந்த தண்ணீரை ஊற்றியும் மகிழ்ந்தனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியில் வந்து ஹோலியை கொண்டாடினர்.

    வாலிபர்கள், இளம்பெண்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் கலர் பூசினர். கார், மோட் டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்களில் சென்றும் வீதிகளில் ஆரவாரமாக கொண்டாடினர்.

    காலையில் இருந்து மதியம் வரை ஒருவரையொருவர் விரட்டி சென்று வண்ண கலர் பொடிகளை பூசினர். சென்னையில் பல்வேறு இடங்களில் வடமாநிலத்தவர்கள் ஒருவருக்கொருவர் நேரிலும், போனிலும் ஹோலி வாழ்த்துக்களை கூறி அன்பை வெளிப்படுத்தினர். சிலர் கட்டிப்பிடித்து ஆட்டம், பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

    • இந்திய அணி வீரர்கள் தங்களது டீம் பஸ்ஸில் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளைப் பூசி ஹோலியை கொண்டாடினர்.
    • இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடக்கவுள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில் இந்திய அணி ஹோலி பண்டிகையை கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்திய அணி வீரர்கள் தங்களது டீம் பஸ்ஸில் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளைப் பூசி ஹோலியை கொண்டாடினர். இதுதொடர்பான வீடியோவை சுப்மன் கில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவும் வைரலாக பரவியது.

    அதில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, கில், உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஆகியோர் முகத்தில் வண்ணம் பூசி இருந்தது. பின்னணியில் ராங் பார்சே பாடல் ஒலிக்க, அனைத்து வீரர்களும் ஜாலி மனநிலையில் இருந்தனர்.

    ×